அரசு தேர்விற்கான அறிவரங்கம்: தமிழ் இலக்கியம்
தமிழ் மொழியின் சிறப்பு
*
இந்தியாவில் தோன்றிய மிக்த் தொன்மையான மொழி
தமிழ்
*
திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரி
விடிவ எழுத்தைக் கொண்ட மொழி தமிழ்.
*
திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும்
துணைபுரியும் மொழி தமிழ்
*
தமிழில் 3
இனங்கள் உண்டு.
அவை
முறையே வல்லினம்,
மெல்லினம்,
இடையினம் ஆகும்.
தமிழ் என்ற
சொல்லிலே 3
இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.
*
தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும்
தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.
*
தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர்
தேவநேயப் பாவாணர்.
*
தமிழ் இலங்கை,
பர்மா,
சிங்கப்பூர்,
மலேசியா,
இந்தோனேசியா,
தென்ஆப்பிரிக்கா,
பிஜிட்தீவு,
மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.
*
இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறவிக்கப்பட்ட
ஒரே மொழி தமிழ்.
*
முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்
*
திராவிட மொழிகள் குறித்தும் மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
*
தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல்
தோன்றி 2000
ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.
அப்படியானால்
இம்மொழி தோன்றி குறைந்தது 10,000
ஆண்டுகளாகியிருக்க
வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின்
கருத்து.
*
தமிழின் முதல் இலக்கண நூல்
தொல்காப்பியம்.
அவை 3
அதிகாரம், 27
இயல்கள்,
1610
நூற்பாக்களும்,
தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3
பால்கள், 133
அதிகாரங்கள்,1330
குறள்களையும்,
சிலப்பதிகாரம் 3
காண்டம், 30
காதைகள் 5001
வரிகளையும்,
மணிமேகலை 30
காதைகள், 4755
வரிகளையும்,
சீவகசிந்தாமணி 13
இலம்பகங்கள், 3145
பாடல்கள்.
பெரிய புராணம் 2
காண்டங்கள்,
13
சருக்கங்கையும், 4286
பாடல்களையும்,
கம்பராமாயணம் 6
காண்டங்கள், 118
படலங்கள், 10589
பாடல்களையும்,
நல்லாப்பிள்ளை பாரதம் 18
பருவங்கள், 11000
பாடல்களையும்.
கந்தபுராணம் 6
காண்டம், 135
படலங்கள், 10345
பாடல்களையும்,
திருவிளையாடற்புராணம் 3
காண்டங்கள், 36
படலங்கள், 3615
பாடல்களையும்.
சீறாப்புராணம் 3
காண்டங்கள், 92
படலங்கள், 5027
பாடல்களையும்,
இரட்சணிய யாத்திரிகம் 5
பருவங்கள், 47
படலங்கள்,3776
பாடல்களையும்,
இராவண காவியம் 5
காண்டம்,
57
படலங்கள், 3106
விருத்தங்களையும்,
ஏசு காவியம் 5
பாகம்,
149
அதிகாரம், 810
விருத்தங்கள், 2346
அகவலடிகளையும் கொண்டுள்ளது.
*
தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை
மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.
*
தமிழ் மொழி பக்தி மொழி,
மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப்
போற்றும் அன்புமொழி.
உலகில் வேறு எந்த
மொழியிலும் காணக்கிடைக்காத அளவு
பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.
*
சைவம் பன்னிருதிருமுறையையும்,
வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும்
வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன.
இது
நெடுங்காலமாகப்
பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.
*
தேவாரம்,
திருவாசகம்,
திருப்பாவை,
திருவெம்பாவை,
திருமொழி,
திருவாய்மொழி,
திருமந்திரம்,
திருவருட்பா,
திருப்புகழ்,
தேசோமயானந்தம்,
சருவசமயக்கீர்த்தனைகள்,
இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள்,
இத்தகைய
தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும்
இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.
*
வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள்
பலரும் தமிழைத் "
தமிழ்'
எனக் கூறாது,
பல்வேறு அடைமொழிகளிட்டு "
விட்டுச் சித்தன் விரித்த தமிழ்,
தேனாரின் செய்தமிழ்,
சொல்லில் பொலிந்த தமிழ்,
சீர்மலி
செந்தமிழ்,
திருவரங்கத் தமிழ்,
கோதைவாய்த் தமிழ்,
நடைவிளங்கு தமிழ்,
நல்லியல் இன்தமிழ்,
சங்கத் தமிழ்,
சங்கமுகத் தமிழ்,
சங்கமலி தமிழ்,
நா மருவு
தமிழ்,
பாவளருந் தமிழ்,
இன்தமிழ்,
வியன்தமிழ்,
தூயதமிழ்,
நற்றமிழ்,
நல்லிசைத் தமிழ்,
ஒண்தமிழ்,
தண்தமிழ்,
வண்தமிழ்,
இருந்தமிழ்'
எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர்.
இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும்.
*
நமது நாட்டிற்குச் "
செந்தமிழ் நாடு'
என்ற பெயர்
வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்.
இதில் நாட்டிற்கு அடைமொழியாக
நமது மொழியும்,
மொழிக்கு அடைமொழியாகச் "
செம்மை'
யும் அமைந்திருப்பது
பெரிதும் வியப்பிற்குரியதாகும்.
* "
தமிழுக்கும் அமுதென்று பேர்'',
தமிழ்,
தமிழ்
எனக் கூற அது "
அமிழ்ந்து'
என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.
அந்த
அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""
தமிழுக்கும் அமுதென்று பேர்;
அது எங்கள்
உயிருக்கு நேர்''
எனவும் கூறி,
உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட
கவிஞர் அவர்.
இதுகாறுங் கூறியவற்றால்,
தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு
அறியலாம்.
* "
தமிழ்'
என்பதற்கு "
இனிமை'
என்றும் ஒரு
பொருளுண்டு.
இதனை ""
இனிமையும் அழகும் தமிழ் எனல்
ஆகும்''
என்பதனால் நன்கறியலாம்.
மேலே காட்டிய தீந்தமிழ்,
தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும்
இதனை மெய்ப்பிக்கும்.
* "
பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்''
என்ற தன் மனைவியை நோக்கிப்
புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:
""
போடி
பைத்தியக்காரி!
இன்று அரசவையில் புகழேந்தி
அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம்.
உன் பாலில் என்னடி,
சுவையாயிருக்கப்
போகிறது?''
என்னே தமிழின் சுவை!
""
அறம்
வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள்,
கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்''
எனப்
பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும்,
அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன்
கூறியது என்ன தெரியுமா?
""
தமிழைச்
சுவைப்பதன் மூலம் சாவே வரினும்
அதனை மகிழ்வோடு வரவேற்பேன்''
என்பதே.
என்னே தமிழின்
இனிமை! -
இவ்வாறு தமிழின் சிறப்புகளை
அடிக்கிக் கொண்டே பேகலாம்.
மூன்று சங்கங்கள்
*
மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும்,
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
பெருமை பாண்டியருக்கே உரியது.
*
சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில்
இல்லை.
சங்கம் என்ற சொல்லை முதன்
முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச்
சாத்தனார்.
*
மூன்று சங்கங்கள் பற்றிய விரிவான செய்தியை
அல்லது வரலாற்றை முதலில் குறிப்பிட்டவர் இறையனார்
அகப்பொருள் உரையின் ஆசிரியர் நக்கீரர்.
*
முச்சங்கத்திற்கும் உரிய நூல் அகத்தியம்.
*
முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்.
*
இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.
*
இசைத்தமிழ் இல்க்கண நூல் முதுநாரை.
நாடகத் தமிழ் இலக்கண நூல்
இந்திரகாளியம் மற்றும் பஞ்சமரபு ஆகியன.
*
புலவர்களின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர்
அகத்தியர்.
அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்.
*
அகத்தியரின் 12
மாணவர்களும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு
படலம்.
*
அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம்
தென்தமிழ் மதுரை என்று குறிப்பிடுவது
மணிமேகலை.
*
சங்கத் தமிழ் மூன்றும் தா
என்பது ஒளவையாரின் தனிப்பாடல் ஆகும்.
*
முச்சங்கத்தையும் மறுத்தவர்ள் பி.
டி.
சீனிவாச
ஐயங்கார்,
கே.
என்.
சிவராஜ
பிள்ளை,
கா.
மச்சிவாய முதலியார்
ஆகியோர்.
*
மூன்று சங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உ.
வே.
சாமிநாத ஐயர்,
கா.
சு.
பிள்ளை,
கா.
அப்பாத்துரை,
தேவநேயப் பாவணர் ஆகியோர்.
முதற்சங்கம்
*
முதற்சங்கம் இருந்த இடம் தெனமதுரை.
முதற்சங்கத்தின் காலம் சுமார் 4440
ஆண்டுகள்.
முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 549.
*
முதற்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை
4449.
*
முதற்சங்கம் சார்ந்த நூல்கள் அகத்தியம்,
பெரும் பாரிபாடல்,
முதுநாரை,
முதுகுருகு ஆகியன.
*
முதற்சங்கம் சார்ந்த புலவர்கள் அகத்தியர்,
நிதியின் கிழவன் ஆகியோர்.
இடைச்சங்கம்
*
இடைச்சங்கம் இருந்த இடம் கபாடாபுரம்
(
குமரி ஆற்றங்கரை).
இடைச்சங்கத்தின் காலம் சுமார் 3700
ாண்டுகள்.
இடைச்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 3700.
*
இடைச்சங்க நூல்கள் தொல்காப்பியம்.
மாபுராணம்,
பூதபுராணம் ஆகியன.
கடைச்சங்கம்
*
கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை
(
இன்றைய மதுரை).
கடைச்சங்கத்தின் காலம்
சுமார் 1850
ஆண்டுகள் கடைச்சங்கத்தில் புலவர்கள் 449
பேர்.
*
கடைச்சங்கம் சார்ந்த நூல்கள் நெடுந்தொகை,
குறுந்தொகை,
நற்றினை,
புறநானூறு,
ஐந்குறுநூறு,
பதிற்றுப்பத்து,
கலித்தொகை,
பரிபாடல்,
கூத்து,
வரி ஆகியன.
*
சிறுமேதாவியார்,
அறிவுடையார்,
இளந்திருமாறன்,
நல்லந்துவனார்,
மருதனிள நாகனார்,
நக்கீரனார்
ஆகியோர் கடைச்சங்க காலப் புலவர்கள்.
இறையானர் களவியல் உரை
*
நூலின் பெயர் அகப்பொருள் அல்லது
களவியல் ஆகும்.
இதனை இயற்றியவர்
இறையனார் அல்லது சிவன்.
இதற்கு
உரை எழுதியவர் நக்கீரர்.
*
உரைச் சிறப்பின் காரணமாக இந்நூலே இறையனார்
களவியல் உரை என்று வழங்கப்படுகிறது.
*
தமிழில் தோன்றிய உரையாசிரியர் நக்கீரர்.
களவியலுக்கு நக்கீரர் செய்த உரையே சிறந்தது
என்பவர்.
சங்க இலக்கியச் செய்திகள்
*
வாத்யாயனார் இயற்றிய நூல் காமசூத்திரம்.
காமசூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்
அதிவீரராம பாண்டியன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் கொக்கோகம்.
*
திணை இல்க்கியம் என்று அழைக்கப்படுவது சங்க
இலக்கியம்.
*
சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் அனைத்தும் பாத்திரக் குற்றுகள் ஆகும்.
புறப்பாடல்கள் அனாத்தும்
புலவர் கூற்றுகள் ஆகும்.
*
எட்டுத்தொகை நூல்கள் என்பவை நற்றினை,
குறுந்தொகை,
ஒங்குறுனூறு,
கலித்தொகை,
அகநானூறு,
புறநானூறு,
பதிற்றுப்பத்து,
பரிபாடல் ஆகியன.
*
எட்டுத் தொகை நூல்களில் அக
நூல்கள் ஐந்து,
புற நூல்கள்
இரண்டு.
அகமும் புறமும் கலந்த
நூல் ஒன்று (
பரிபாடல்).
*
எட்டுத் தொகை நூல்களில் காலத்தால்
முந்தியது புறநானூறு.
*
அகநானூறு அகம் என்றும்,
அகப்பாட்டு
என்றும்,
நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.
*
புறநானூறு புறம் என்றும்,
புறப்பாட்டு
என்றும்,
புறம்பு நானூறு என்றும்
குறிப்பிடப்படுகிறது.
நற்றிணை
*
இது ஒரு அகநூல். 400
பாடல்கள்
கொண்டது.
நற்றினையைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
*
நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன்
பாண்டியன் மாறன் வழுதி.
*
தொண்டி என்பது சேர நாட்டுத்
துறைமுகம்,
கொற்கை என்பது பாண்டிய
நாட்டுத் துறைமுகம்,
மாந்தை என்பது சேர
நாட்டுக் கடற்கரை ஊர் என்பது
போன்ற செய்திகள்
நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.
குறுந்தொகை
*
குறுந்தொகை இது ஒரு அகநூல்.
400
பாடல்கள் கொண்டது.
குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ.
தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
*
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனைப்
பற்றியதாகும்.
குறுந்தொகையின்
மூலம் அறியப்படும் செய்திகள்:
*
நன்னன் என்பவன் பெண் கொலை
புரிந்த மன்னன்.
அதியமானின் தலைநகரம்
தகடூர்(
தர்மபுரி).
*
கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரி.
பரம்பு மலை தலைவன் பாரி.
*
திருக்கோவிலூரையும்,
முள்ளூரையும் ஆட்சி செய்த மன்னன்
மலையாமான் திருமுடிக்காரி.
*
கரிகாலனுக்கு திருமாவளவன் என்ற பெயரும் உண்டு.
*
கரிகாலனின் மகள் ஆதிமந்தி.
*
யாய் என்றால் என் தாய்
என்று பொருள்,
ஞாய் என்றால் உன்
தாய் என்று பொருள்,
தாய்
என்றால் அவன் தாய் என்று
பொருள்.
*
எந்தை என்றால் எம் தந்தை
என்று பொருள்,
நுந்தை என்றால் உம்
தந்தை என்று பொருள்,
தந்தை
என்றால் அவர்கள் தந்தை என்று
பொருள்.
*
அவ்வை என்றால் எம் அக்காள்
என்று பொருள்,
நூவ்வை என்றால் உம்
அக்காள் என்று பொருள்,
தவ்வை
அவர்கள் அக்கா என்று பொருள்.
*
கொற்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று தொடங்கும்
பாடலை இயற்றியவர் இறையனார். (
குறுந்தொகை)
ஐங்குறுநூறு
*
இது ஒரு அகநூல். 500
பாடல்கள்
கொண்டது.
திணைக்கு நூறு பாடல்கள் வீதம்
ஐந்து திணைகளின் கீழ் அமையப் பெற்றது.
பாடிய புலவர்கள் ஐவர்.
*
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் கூடலூர்கிழார்.
தொகுப்பித்த அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
*
ஐங்குறுநூற்றை முதன் முதலாக தொகுப்பித்தவர்
உ.
வே.
சாமிநாதையர்.
*
சங்க கால மக்கள் பகல்
12
மணியிலிருந்து நாளைக் கணக்கிட்டனர் என்னும்
செய்தியை ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.
*
ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது
என்ற செய்தியையும்,
பெண்களுக்கு இடக்கண் துடித்தால் மல்லது
என்ற செய்தியையும் இந்நூலில்ருந்து அறிய முடிகிறது.
பதிற்றுப்பத்து
*
சேர அரசர்கள் 10
பேர் பற்றஇ 10
புலவர்கள்
தலா பத்து பாடல்கள் வீதம்
பாடிய தொகையே பதிற்றுப்பத்து.
*
முதல் பத்தும் இறுதிப் பத்தும்
கிடைக்கவில்லை. 80
பாடல்களே கிடைத்துள்ளன.
முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர்
உ.
வே.
சாமிநாதையர்.
பதிற்றுப்பத்தின்
மூலம் அறியப்படும் செய்திகள்
*
கடம்பர்கள் என்பவர்கள் சேர நாட்டு கடற்கொள்ளையர்கள்
ஆவர்.
*
அதியமானை வென்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானுக்கு அதிகன் என்ற பெயரும்
உண்டு.
*
கிடுகு என்றால் கேடயம் என்று
பொருள் சேர நாட்டின் துறைமுகம்
தொண்டி.
பரிபாடல்
*
பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும்
பாவகைகலில் ஒன்று.
எனவே பாவகையால்
பெயர் பெற்ற நூல் பரிபாடல்
ஆகும்.
*
எட்டுத் தொகை நூல்களிலேயே அகத்திற்கும்,
புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்.
*
பொருட்கலவை நூல் என்றும் பரிபாடல்
குறிப்பிடப்படுகிறது.
*
தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.
*
எட்டுத் தொகை நூல்களுள் அறம்,
பொருள்,
இன்பம்,
வீடு என்ற
நான்கையும் கூறும் நூல் பரிபாடல்.
*
எட்டுத் தொகை நூல்களில் பாண்டியர்களைப்
பற்றி மட்டும் கூறும் நூல்கள்
இரண்டு 1.
பரிபாடல் 2.
கலித்தொகை
*
பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
பரிபாடல்
என்ற நூல் 70
பாடல்களைக் கொண்டதாக
உள்ளது.
*
பரிபாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
பரிபாடலுக்கு
உரை எழுதியவர் பரிமேலழகர்.
*
பரிபாடலை முதலில் பதிப்பித்தவர் உ.
வே.
சாமிநாதையர்.
பரிபாடல் மூலம் அறியப்படும் செய்திகள்
*
அம்பா ஆடல் என்பது தை
நீராடல் ஆகும்.
தை நீராடல்
தற்போது மார்கழி நோன்பாக மாறியுள்ளது.
*
நெய்தல்,
குழலை,
ஆம்பல்,
சங்கம்,
கமலம்,
வெள்ளம் என்பவை நீண்ட
காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும்.
*
உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் பரிபாடல்.
கலித்தொகை
*
இது ஒரு அகநூல்.
கலிப்பா
என்ற பாவகையால் ஆன நூல் கலித்தொகை.
மொத்தம் 150
பாடல்கள் கொண்டது.
*
கலித்தொகை ஐந்திணை நூலாகும்.
இதனைத்
தொகுத்தவர் நல்லந்துவனார்.
*
கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று
கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது.
*
ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல்
கலித்தொகை.
ஏறு தழுவுதல் (
ஜல்லிக்கட்டு)
என்பது ஒரு வீர விளையாட்டு.
*
பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே
சங்க நூல் கலித்தொகை ஆகும்.
*
நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு,
ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார்,
குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி,
பசு மேய்ப்பவர் கோவினத்தார்,
நல்லினத்தார் என்று
குறிப்பிடப்பட்ட செய்தி ஆகியவற்றை கலித்தொகை
குறிப்பிடுகிறது.
அகநானூறு
*
இது ஒரு அக நூல்
ஆகும்.
ஆசிரியப்பாவால் ஆன 400
பாடல்கள் கொண்டது.
*
அகநானூற்றைத் தொகுத்தவர் உருத்திர சன்மனார்.
தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆவார்.
*
அகநானூறு களிற்றியானை நிறை,
மணிமிடைப் பவளம்,
நித்திலக்கோவை என மூன்று பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
*
அகநானூறு நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.
*
குடவோலை முறைச் தேர்தல் குறித்து
கூறும் நூல் அகநானூறு.
*
சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் குறிப்பிடும்
அக நூல் அகநானூறு.
புறநானூறு
*
இதுவொரு புற நூல்.
அகவற்பாவால்
ஆன 400
பாடல்கள் கொண்டது.
*
புறநானூற்றைத் தொகுத்தவர்,
தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
*
புறம்,
புறப்பாட்டு,
புறம்பு,
தமிழ்க் கருவூலம் என
வேறு பெயர்களைக் கொண்டு புறநானூறு வழஹ்கப்படுகிறது.
*
அறம்,
பொருள்,
வீடு என்ற மூன்றைப்
பற்றியும் பாடும் நூல் புறநானூறு
ஆகும்.
*
சேரன் போந்தை (
பனை)
மலரையும்,
சோழன்
அத்தி மலரையும்,
பாண்டியன் வேம்பு மலரையும் அடையாள
மலராகக் கொண்டிருந்தனர் என்று புறநானூறு இயம்புகிறது.
*
சேரன் வில் கொடியையும்,
சோழன்
புலிக்கொடியையும்,
பாண்டியன் மீன் கொடியையும் கொண்டிருந்தனர்
என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.
*
சேரனின் தலைநகரம் வஞ்சி என்றும்,
சோவனின்
தலைநகரம் உறையூர் அல்லது உறந்தை,
தஞ்சாவூர் (
தஞ்சை)
என்றும்,
பாண்டியனின்
தலைநகர் மதுரை என்றும்,
பல்லவரின்
தலைநகர் காஞ்சி என்றும் இது
குறிப்பிடுகிறது.
*
பாரதப்போரில் சோறு படைத்தவர் உதியஞ்சேரல்
என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.
*
பாரிக்கு உரிய மலை பரம்பு
மலை,
பேகனுக்கு உரியது பழனிமலை,
ஓரிக்கு
உரியது கொல்லிமலை,
ஆய்க்கு உரியது பொதிகை
மலை,
அதியனுக்கு உரியது தகடூர்,
நன்னனுக்கு
உரியது நவிரமலை போன்ற செய்திகளையும்
புறநானூறு குறிப்பிடுகிறது.
*
கபிலரை ஆதரித்தவன் பாரி,
ஒளவையாரை ஆதரித்தவன்
அதியமான்,
பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன்,
மாங்குடி மருதனாரை
ஆதரித்தவன் நெடுஞ்செழியன்,
பிசிராந்தையாரிடம் நட்பு கொண்டவன் கோப்பெருஞ்சோழன்
போன்ற விவரங்களையும் இது குறிப்பிடுகிறது.
*
அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார்.
கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது
சென்றவர் எயிற்றியனார்.
நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர்
கோவூர் கிழார் ஆகிய செய்திகளையும்
புறநானூறு மூலம் அறியலாம்.
*
யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர
வாரா போன்ற வரிகள் கணியன்
பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள்.
அரசு தேர்விற்கான அறிவரங்கம்: தமிழ் இலக்கியம்-1
கபிலர்
*
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் பிறந்தவர்
கபிலர்.
குறிஞ்சிக் கவி பாடுவதில் வல்லவர்.
*
புலன் அழுகற்ற அந்தணன் என்று
இவரைப் பாராட்டியவர் நப்பசலையார்.
*
நல்லிசை வாய்மொழிக் கபிலன் என்று நக்கீரரால்
பாராட்டப்பெற்றவர்.
*
பரணர்,
இடைக்காடர்,
பாரி வள்ளல் ஆகியோரின்
நண்பர்கள் கபிலர்.
*
பாரி வள்ளலின் அவைப் புலவராகவும் கபிலர்
திகழ்ந்தார்.
*
பாரி மகளிரை அழைத்துச் சென்று
இருங்கோவேள்,
விச்சுவக்கோ ஆகிய மன்னர்களிடம் அப்பெண்களை
மணந்து கொள்ள வேண்டியவர் கபிலர்.
*
வரலாற்றுச் செய்திகளை மிகுதியாக பாடிய பரணர் கபிலரின்
நண்பர் ஆவார்.
கோவூர் கிழார்
*
உறையூர் சோழருக்கும் (
நெடுங்கிள்ளி)
புகார் சோழருக்கும் (
நலங்கிள்ளி)
இடையில் போர் நிகழாமல் இருக்கத்
தூது சென்றவர் கோவூர் கிழார்.
*
மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை கிள்ளி வளவன் யானைக்காலில்
இரட்டுக் கொல்ல முயன்றபோது தடுத்து
நிறுத்தியவர் இவர்.
சோறும் நீரும் இரு மருந்து
என்று பாடியவர் கோவூர் கிழார்.
ஒளவையார்
*
ஒளவை என்பதற்கு தாய் என்று பொருள்
வழங்கப்படுகிறது.
அதியமானின் அவைப்புலவர் மற்றும் நண்பராகத் திகழ்ந்தவர்.
*
அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர்
ஒளவையார்.
*
நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக
பெரும என்று நெல்லிக்கனி தந்தபோது
அதியமானை வாழ்த்தியவர் ஒளவையார்.
*
இலக்கிய வரலாற்றில் ஐந்து ஒளவையார்கள் உள்ளனர்.
1.
சுட்ட கனி வேண்டுமா,
சுடாத
கனி வேண்டுமா என்று கேட்ட புராண
ஒளவையார். 2.
அதியமானைப் பாடிய புறநானூற்று ஒளவையார்.
4.
ஆத்திச்சூடி,
கொன்றை வேந்தன் மூதுரை,
நல்வழி போன்ற சிறுவர் நீதி
நூல்களைப் பாடிய சோழர் கால
ஒளவையார். 4.
தனிப்பாடல் திரட்டில் உள்ள சில பாடல்களைப்
பாடிய இடைக்கால ஒளவையார்.
பிசிராந்தையார்
*
பாண்டிய நாட்டுப் புலவரான பிசிராந்தையார் தலைமுடி
நரைக்காமல் இருக்கக் காரணம் உரைத்தவர் ஆவார்.
*
கோப்பெருஞ்சோழனின் நண்பர் இவர்.
இருவரும்
முகம் காணாமலே நட்பு கொண்டிருந்தனர்.
*
கோப்பெருஞ்சோழனுடன்
வடக்கிலிருந்து உயிர் துறந்தவர் பிசிராந்தையார்
ஆவார்.
பத்துப்பாட்டு
*
திருமுருகாற்றுப்படை,
பெருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டு,
மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை,
குறிஞ்சிப் பாட்டு,
பட்டினப்பாலை,
மலைபடுகடாம்
ஆகியன பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.
*
திருமுருகாற்றுப்படையின்
வேறு பெயர் புலவராற்றுப்படை ஆகும்.
*
பெரும்பாணாற்றுப்படையின்
வேறு பெயர் பாணாறு ஆகும்.
*
முல்லைப்பாட்டின் வேறு பெயர் நெஞ்சாற்றுப்படை
ஆகும்.
*
குறிஞ்சிப்பாட்டு பெருங்குறிஞ்சி என்றும் அழைக்கப்படும்.
*
பட்டினப்பாலையை வஞ்சி நெடும்பாட்டு என்றும்
அழைப்பர்.
*
மலைபடுகடாம் என்பதன் வேறு பெயர்
கூத்தராற்றுப்படை ஆகும்.
*
பத்துப்பாட்டில் உள்ள அக நூல்களின்
எண்ணிக்கை மூன்று,
புற நூல்களின்
எண்ணிக்கை ஆரு ஆகும்.
*
பத்துப்பாட்டில் அகமா,
புறமா என்ற
கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் நெடுநல்வாடை.
*
பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைப்பாட்டு,
மிகப்பெரிய நூல் பொருநராற்றுப்படை.
*
ஆற்றுப்படை நூல்களில் மிகப்பெரியது மலைபடுகடாம்.
*
திருமுருகாற்றுப்படையை
இயற்றியவர் நக்கீரர்.
நக்கீரரால் பாடப்பட்ட கடவுள் முருகன்.
*
திருமுருகாற்றுப்படை கூறும் முருகனின் அறுபடை
வீடுகள் 1.
திருப்பரங்குன்றம் 2,
திருச்செந்தூர் 3.
திருவாவினன்குடி (
பழனிமலை) 4.
சுவாமிமலை 5.
குன்றுதோறாடல் 6..
பழமுதிர்ச்சோலை ஆகியன.
*
பொருநராற்றுப்படையை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்.
வேடம் தாங்கி நடிப்வர்கள்
பொருநர்கள் ஆவர்.
*
சிறுபாணாற்றுப் படையை இயற்றியவர் நல்லூர்
நத்தத்தனார்.
இந்நூல் கடையெழு வள்ளல்களைப்
பற்றிக் குறுகிறது.
*
பேகன் மயிலுக்குப் போர்வை தந்தான்,
அதியமான்
நெல்லிக்கனியை ஒளவைக்கு தந்தான் என்பன போன்ற
செய்திகளை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
*
பெரும்பாணாற்றுப்படையை
இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆவார்.
பட்டினப் பாலையைப்
பாடியவரும் இவரே.
*
திருவெஃகா என்பது காஞ்சிபுரம் என்ற
நகரம் என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
*
நப்பூதனார் முல்லைப்பாட்டை இயற்றினார்.
மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் ஆவார்.
*
நெடுநல்வாடையைப் பாடியவர் நக்கீரர்.
நெடுநல் வாடையில் பாட்டுடைத்
தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
*
கபிலர் குறிஞ்சிப்பாட்டை இயற்றினார்.
இது ஒரு அகநூல்.
99
பூக்கள் குறித்துக் கூறும் நூல் குறிஞ்சிப்பாட்டு
ஆகும் அத்துடன் 12
ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்
மலர் குறிஞ்சி மலர் ஆகும்.
*
பட்டினப்பாலையை இயற்றியவர் கடியலூர் உருட்திரங்கண்ணனார்.
பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தைக் குறிக்கும் இந்நகருக்கு
பூம்புகார்,
புகார் என்று வேறு
பெயர்களும் உண்டு.
*
புகார் நகரத்தில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றி பட்டினப்பாலை வரிவாக
எடுத்தியம்புகிறது.
*
மலைபடுகடாம் நூலை இயற்றியவர் பெருங்கெளசிகனார்.
பண்டைய இசைக் கருவிகள் பற்றி
மிகுதியாகக் கூறும் நூல் மலைபடும்கடாம்.
*
பெண் கொலை புரிந்த நன்னன்
பற்றி மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.
*
பத்துப்பாட்டில் அகநூலாக இருந்தும் புறச்
செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல் பட்டினப்பாலை.
*
பண் பாடுவோன் பாணன்,
பாணன் மனைவி
பாடினி,
விறவி.
பாணனிடன் சேர்ந்து
பாடுபவள் பாடினி.
பாணனின் பாட்டுக்கு
ஆடுபவள் விறலி.
ஆடும் ஆண்கள்
கூத்தர்கள்.
வேடந்தாங்கி நடிப்போர் பொருநன்.
சங்கம் மருவிய கால செய்திகள்
*
சங்கம் மருவிய கால இலக்கியங்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
நீதிநூல்கள் ஆகியவை.
*
சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தை
ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள் ஆவர்.
*
சங்கம் மருவிய கால இலக்கியத்திற்கு
இருண்ட கால இலக்கியம் என்றும்
பெயர் உண்டு.
*
சமண சமயமும்,
பெளத்த சமயமும் மேலோங்கி
நின்ற காலம் இது.
*
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் இக்காலத்தில் தோன்றியவையே.
*
வேளாண் வேதம்,
நாலடி நானூறு,
நாலடி என பல்வேறு பெயர்களில்
வழங்கப்படும் நூல் இது.
*
பாண்டிய நாட்டு சமண முனிவர்களால்
இயற்றப்பட்ட நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார்.
*
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை
நூல் நாலடியார் ஆகும்.
*
நாலடியாரை ஜி.
யு.
போப்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
*
ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி,
நாலும் இரண்டும்
சொல்லுக்கு உறுதி இதில் நாலும்
என்ற சொல் நாலடியாரையும்,
இரண்டும்
என்ற சொல் திருக்குறளையும் குறிப்பதாகும்.
*
கல்வி கரையில,
கற்பவர் நாள்
சில -
நாலடியார்.
*
நான்மணிக் கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார்.
கடிகை
என்றால் பகுதி (
துண்டு)
ென்று
பொருள்.
ஆபரணம் என்றும் பொருள்
வழஹ்கப்படும்.
*
இன்னா நாற்பது நூலின் ஆசிரியர்
கபிலர்.
இது துன்பம் கொடுக்கும்
செயல்களைத் தொகுத்துக் கூறும் நூலாகும்.
*
இனியவை நாற்பது நூலை இயற்றியவர்
பூதஞ்சேந்தனார்.
*
கார் நாற்பது நூலின் ஆசிரியர்
மதுரைக் கண்ணன் கூத்தனார்.
இது
ஒரு அக நூல்.
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரு திணையை (
முல்லை)
மட்டும் பாடிய நூல் கார்
நாற்பது.
*
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புறப்பொருள் பற்றிக் கூறும் ஒரே
நூல் களவழி நாற்பது.
இதன்
ஆசிரியர் பொய்கையார்.
கார்த்திகை திருவிழா பற்றி இந்நூல் சிறப்பித்துக்
கூறுகிறது.
*
கலிங்கத்துப் பரணி போன்ற பிற்கால
நூல்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய நூல் களவழி நாற்பது.
*
ஐந்திணை எழுது நூலின் ஆசிரியர்
மூவாதியார்.
*
திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்
கண்ணன் சேந்தனார்.
*
திணைமாலை நூற்றைம்பது நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.
இவர் ஏலாதி என்ற நூலையும்
இயற்றியுள்ளார்.
*
மருந்தின் பெயரால் பெயர் பெற்ற
நூல் திரகடுகம்.
திரி என்றால் மூன்று,
கடுகம் என்றால் காரமுடையது என்று
பொருள்.
அவை சுக்கு,
மிளகு,
திப்பிலி ஆசிரியர் நல்லாதனார்.
*
ஒழுக்கங்களை அடுக்கிக் கூறும் நூல் ஆசாரக்கோவை
ஆசிரயர் பெருவாயில் முள்ளியார்.
*
பழமொழி நானூறு நூலை இயற்றியவர்
முன்றுரை அரையனார்.
தொல்காப்பியர் பழமொழியை முதுசொல் என்று குறிப்பிடுகிறார்.
*
கற்றலின் கேட்டலே மன்று,
குன்றின்
மேல் இட்ட விளக்கு,
தனிமரம்
காடாதல் இல்,
திங்களை நாய்க்
குரைத்தற்று,
நிறை குடம் நீர்ட்ததும்பல்
இல்,
நுணலும் தன் வாயால்
கெடும்,
பாம்பின் கால் பாம்பறியும் ஆகிய
மேற்கோள்கள் பழமொழி நானூறு நூலில்
இடம் பெருகின்றன.
*
சிரிபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் காரியாசான்
ஐந்து வேர்கள் குறித்த மருத்துவம்
பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.
*
முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் கூடலூர்
கிழார்.
இது நிலையாமையைப் பாடும்
நூலாகும்.
*
இன்னிலை நூலின் ஆசிரியர் பொய்கையார்
ஆவார்.
கைந்நிலை நூலின் ஆசிரியர் புல்லங்காடனார்.
*
பதிபெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்களின் எண்ணிக்கை
12.
திருக்குறள்
*
முப்பால் எனப்படும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒன்றாகும்.
*
உத்தரவேதம்,
செய்வநூல்,
பெய்யாமொழி,
வாயுறை வாழ்த்து,
தமிழ்மறை,
பொதுமறை,
திருவள்ளுவப்பயன்,
திருவள்ளுவம் ஆகிய வேறு பெயர்களும்
இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
*
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளூவர்.
*
வள்ளுவநாயனார்,
தேவர்,
முதற்பாவலர்,
தெய்வப்புலவர்,
நான்முகன்,
மாதானுபங்கி,
செந்நாப்போதார்,
பெருநாவலர்,
பொய்யில் புலவன் போன்ற வேறு
பெயர்களும் இவருக்கு வழங்கப்படுகிறது.
*
திருக்குறளின் மொத்த அதிகாரங்கள் 133.
மொத்தப்
பாடல்களின் எண்ணிக்கை 1330,
அனைத்தும் குறள் வெண்பாக்கள்.
*
அறத்துப்பால் 38
அதிகாரங்களையும்,
பொருட்பால் 70
அதிகாரங்களையும்,
காமத்துப்பால் 25
அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
*
பதினெண் காழ்க்கணக்கு நூல்களில் அதிக அறங்களைச் சொல்லும்
நூல் திருக்குறள்.
*
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும்
கொண்ட நூல் திருக்குறள்.
*
பதினெண் காழ்க்கணக்கு நூல்களுள் செய்யுளார்(
பாவால்)
பெயர் பெற்ற
ஒரே நூல் திருக்குறள்.
*
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் ஆன
ஒரே நூல் திருக்குறள்.
*
இன்னூல் அ கரத்தில் தொடங்கி
ன கரத்தில் முடிகிறது.
*
திருக்குறளின் சிறப்பை எடுத்துக்கூறும் நூல்
திருவள்ளுவமாலை.
*
திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
*
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.
யு.
போப்.
*
அறத்தான் வருவதேன் இன்பம்,
பெண்ணிற் பெருந்தக்க
யாவுள,
முயற்சி திருவினையாக்கும்,
இடுக்கண்
வருங்கால் நகுக,
கனியிருப்பக் காய்
கவர்ந்தற்று -
திருக்குறளில் இடம் பெறும் முக்கிய
மேற்கோள்கள்.
சிலப்பதிகாரம்
*
சிலம்பு+
அதிகாரம் என்பதே சிலப்பதிகாரம்.
ிதன்
ஆசிரியர் இளங்கோவடிகள்.
சேரன் செங்குட்டுவனின் தம்பியே
இளங்கோவடிகள்.
*
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும்,
முப்பது
காதைகளையும் உடையது.
புகார் காண்டம்,
மதுரைக் காண்டம்,
வஞ்சிக் காண்டம் ஆகியன.
*
சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலன்,
தலைவி
கண்ணகி.
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை.
*
மதுரையின் காவல் தெய்வம் மதுராபதி.
கண்ணகிக்குக் கோயில் கட்டியவன் சேரன்
செங்குட்டுவன்.
*
இளங்கோவடிகளுக்கு கண்ணகியின் வரலாற்றைக் கூறியவர் சீத்தலைச் சாத்தனார்.
*
மழை வேண்டி எடுக்கப்படும் விழா
இந்திர விழா.
இந்திர விழா
குறித்து சிலப்பதிகாரமும்,
மணிமேகலையும் கூறுகின்றன.
*
கண்ணகியின் கால் சிலம்பில் இருந்தது
மாணிக்க பரல்கள்,
கோப்பெருந்தேவியின் காற்சிலம்பில் காணப்பட்டவை முத்துப்பரல்கள்.
*
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
-
சிலப்பதிகாரம்.
*
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் -
சிலப்பதிகாரம்.
*
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர் -
சிலப்பதிகாரம்.
*
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு -
பாரதியார்.
*
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை -
பாரதியார்.
*
சிலப்பிதிகாரத்திற்கு
சிறந்த உரை எழுதியவர் -
அடியார்க்கு
நல்லார்.
*
முதல் காப்பியம்,
முத்தமிழ் காப்பியம்,
நாடக்க் காப்பியம்,
தேசியக்
காப்பியம் ன வேறு பெயர்களாலும்
சிலப்பதிகாரம் வழங்கப்படுகிறது.
மணிமேகலை
*
இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.
தண்டமிழ்ச் சாத்தன்,
தண்டமிழ்ப் புலவர் என்றும் இவர்
அழைக்கப்படுகிறார்.
*
மணிமேகலைத் துறவு என்றும் இந்நூல்
வழங்கப்படுகிறது.
இது ஒரு பெளத்த
காப்பியம்.
*
தமிழின் இரண்டாவது காப்பிய நூல் மணிமேகலை.
*
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்னும்
பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்.
*
மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியல்
பிசிசையிட்டவள் ஆதிரை.
*
மணிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்.
மறைந்த ஊர் காஞ்சிபுரம்.
*
இரட்டைக் காப்பியங்களில் கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை.
சீவக சிந்தாமணி
*
இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர்.
விருத்தப்பாவால் இயற்றப்பட்ட
முதல் காப்பியம் சீவக சிந்தாமணி.
*
சீவக சிந்தாமணி 13
இலம்பகங்களைக் கொண்டது.
மண நூல்,
காமநூல்,
முக்தி நூல் என வேறு
பெயர்களும் இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
இது ஒரு சமணக்
காப்பியம்.
*
காப்பியத் தலைவன் சீவகன்.
ஜி.
யு.
போப் சீவக
சிந்தாமணியை இலியட் மற்றும் ஒடிசி
ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.
*
இந்நூலின் ஆசிரியர் தமிழ்க் கவிஞ்ர்களின் அரசன்
என்று ஜி.
யு.
போப்பினால்
புகழப்பட்டுள்ளார்.
காப்பியங்கள் சார்ந்த செய்திகள்
*
காப்பியம் பெருங்காப்பியம்,
சிறுகாப்பியம் என இரு வகைப்படும்.
*
அறம்,
பொருள்,
இன்பம்,
வீடு என்ற
நாற்பொருளையும் கூறுவது ஐம்பெருங்காப்பியம்.
சிலப்பதிகாரம்
(
இளங்கோவடிகள்),
மணிமேகலை (
சீத்தலைச்சாத்தனார்),
சீவக சிந்தாமணி (
திருத்தக்க
தேவர்),
வளையாபதி,
குண்டலகேசி (
நாக்குத்தனார்)
ஆகியன.
*
சிலப்பதிகாரமும்,
மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படும்.
*
சிலப்பதிகாரம்,
சீவக சிந்தாமணி,
வளையாபதி
ஆகிய மூன்றும் சமண காப்பியங்கள்.
*
மணிமேகலை,
குண்டலகேசி ஆகிய இரண்டும் பெளத்த
காப்பியங்கள்.
*
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அனைத்தும் சமணக் காப்பியங்களே ஆகும்.
நாக குமார காவியம்,
உதயண
குமார காவியம்,
யாசோதர காவியம்,
நீலகேசி,
சூளாமணி (
தோலாமொழித் தேவர்)
ஆகியன.
*
குண்டலகேசிக்கு எதிராக இயற்றப்பட்ட நூல்
நீலகேசி.
குண்டகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார்.
கலைஞர் கருணாநிதி அவர்களால்
மந்திரிகுமாரி என்ற திரைப்படமாக குண்டலகேசி
நூல் ஆக்கப்பட்டுள்ளது.
*
பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேள் ஆவார்.
உதயணன் வரலாற்றை
முதலில் தமிழில் கூறிய நூல்
பெருங்கதை ஆகும்.
அரசு தேர்விற்கான அறிவரங்கம்: தமிழ் இலக்கியம்-2
சைவமும் தமிழும்
*
தமிழை பக்தி மொழி (
இரக்கத்தின்
மொழி)
என்று கூறியவர் மறைத்திரு
தனிநாயக அடிகள்.
*
சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும்,
பக்தி
இலக்கியக் காலம் என்பதும் பல்லவர்
காலமாகும்.
*
சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள்
எனப்படும்.
இவை 12
திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
* 1,2,3
ம் திருமுறைகள் -
திருநாவுக்கரசர் -
தேவராம்.
* 4,5,6
ம் திருமுறைகள் -
திருநாவுக்கரசர் -
தேவாரம்.
* 7
ம் திருமுறை -
சுந்தரர் -
தேவாரம்.
* 8
ம் திருமுறை -
மாணிக்கவாசகர் -
திருவாசகம்,
திருக்கோவையார்.
* 9
ம் திருமுறை -
திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9
நபர்கள்
* 10
ம் திருமுறை -
திருமலர் -
திருமந்திரம்.
* 11
ம் திருமுறை -
திரு ஆலவாய் உடையார்
உட்பட்ட 12
நபர்கள்.
* 12
ம் திருமுறை -
சேக்கிழார் -
பெரிய புராணம்.
*
திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி.
நம்பியாண்டார் நம்பி
தொகுத்தவை 11
துருமுறைகள் மட்டுமே.
நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய
புராணம்.
*
முதல் ஏழு திருமுறைகள் தேவாரம்
எனப்படும்.
திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர்,
சுந்தரர் ஆகிய மூவரும் மூவர்
முதலிகள் எனப்படுவர்.
*
திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர்,
சுந்தரர்,
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக்
குரவர்கள் என்று அழைப்பர்.
*
குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.
*
சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு
திருமுறைகள்.
திருஞானசம்பந்தர்
*
இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை.
சமயக்
குரவர் நால்வரின் முதலாவதாக்க குறிப்பிடப்படுபவர்.
*
தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23
பண்களில்
(
இசைகளில்)
திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
*
திருஞானசம்பந்தரும்,
திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த
இடம் திருப்புகலூர்.
*
திருமறைக்காடு (
வேதாரண்யம்)
கோயில் கதவு திறக்கவும்,
மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர்
ஆவார்.
*
கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர்
திருஞானசம்பந்தர்.
*
திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய
இடம் திருஏடகம்.
*
திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக்
கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.
*
பால் குடித்தபோது பாடியது முதல் பாடல்
தோடுடைய செவியன் எனத் தொடங்கும்
பாடல்.
*
கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம்
ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.
*
மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய
பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும்
பாடல்.
*
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
என்பதும் இவர் இயற்றிய பாடலே.
*
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்
என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.
திருநாவுக்கரசர்
*
திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.
இவரது தமக்கை திலகவதியார்.
*
வாகீசர்,
அப்பர்,
ஆளுடைய அரசு,
தாண்டக வேந்தர்,
தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும்
திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.
*
திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று
அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.
*
திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில்
சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.
*
திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர்
ஆவார்.
இவரது சூலைநோய் (
வயிற்று
வலி)
தீர்க்க தம் தமக்கை
திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர்.
பின்னர்
*
சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.
*
முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ
சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
*
மாசில் வீணையும் மாலை மதியமும் -
திருநாவுக்கரசர்.
*
என் கடன் பணி செய்து
கிடப்பதே -
திருநாவுக்கரசர்.
*
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் -
திருநாவுக்கரசர்.
சுந்தரர்
*
கைலாயத்தில் இவருக்கு ஆலால சுந்தரனார் என்று
பெயர்.
சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலூர்.
*
வன் தொண்டர்,
தம்பிரான் தோழர் ஆகிய வேறு
பெயர்களும் இவருக்கு உண்டு.
*
இறைவனையே மனைவியிடம் தூது அனப்பியதால் வன்தொண்டர்
எனப்பட்டார்.
*
சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம்
திருவெண்ணெய் நல்லூர்.
*
பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா -
சுந்தரர்.
மாணிக்கவாசகர்
*
மாணிக்கவாசகர் இயற்பெயர் தெரியவில்லை.
எனினும் சிலர் திருவாதவூரார்
என்கின்றனர்.
*
திருவாசகம்,
திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றி
உள்ளார்.
*
மாணிக்கவாசகர் பொருட்டே இறைவன் நரியைப் பரியாக்கினார்.
இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின்
கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு
மண் சுமந்தார்.
*
பாடல்களை இவர் சொல்ல இறைவனே
எழுதினார் என்பது மரபு.
*
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மார்கழி
மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.
*
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள்
வாழ்க -
மாணிக்கவாசகர்.
*
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி -
மாணிக்கவாசகர்
*
தென்நாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி -
மாணிக்கவாசகர்.
*
வானாகி மண்ணாகி,
ஒப்பிலா மணியே -
மாணிக்கவாசகர்
*
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
-
மாணிக்கவாசகர்
*
திருவாசகத்திற்கு உருகாதர் ஒரு வாசகத்திற்கும் உருகார்
-
பழமொழி.
*
சைவவேதம் எனப்படுவது திருவாசகம்.
இராமலிங்க அடிகள்
*
பிறந்த ஊர் மருதூர்.
வழிபாட்டுக்
கடவுள் முருகன்.
*
வழிபடு குறு திருஞானசம்பந்தர்.
வழிபடு
நூல் திருவாசகம்.
*
இராமலிங்க அடிகளின் நூல்கள் மனுமுறை கண்ட
வாசகம்,
ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியன.
*
இவர் ஏற்படுத்திய நிறுவனங்கள் சன்மார்க்க சங்கம்,
சத்திய தருமசாலை,
சத்திய ஞானசபை,
சித்திவளாகம் ஆகியன.
*
தம் கொள்கைக்கென தனிக்கொடி கண்டவர்.
இவரது கொடி மஞ்சள்
மற்றும் வெள்ளை நிறம் கொண்டவை.
*
இவரது ஆன்மீக நெறி ஆன்மநேய
ஒருமைப்பாடு என்று போற்றப்படுகிறது.
*
திருவருட்பிரகாச வள்ளலார் என்றும் போற்றப்படுகிறார்.
இவரது
பாடல்கள் திருவருட்பா எனப்படுகின்றன.
*
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை -
இராமிலிங்க அடிகள்.
*
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
-
இராமலிங்க அடிகள்.
*
வான் கலந்த மாணிக்க வாசக
நின் வாசகத்தை -
இராமலிங்க அடிகள்.
தாயுமானவர்
*
சமரச சன்மார்க்கத்தை முதன் முதலாகச் சொன்னவர்.
இதை விரிவாகக் கூறியவர் இராமலிங்க வள்ளலார்.
*
இவர் பாடல்களுக்கு தாயுமான சுவாமிகள் திருப்பாடல்
திரட்டு என்று பெயர்.
*
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே -
தாயுமானவர்.
கம்ப ராமாயணம்
*
இதிகாசங்களில் முதலாவது இதிகாசம் இராமாயனம்.
கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்.
*
இயற்றியவர் கம்பர்.
கம்பராமாயணம் வால்மீகியின்
இராமாயணத்தின் தழுவல் நூல் ஆகும்.
*
கம்பராமாயணம் 6
காண்டங்களையும், 113
படலங்களையும் உடையது.
பால காண்டம்,
அயோத்தியா காண்டம்,
ஆரண்ய காண்டம்,
கிஷ்கிந்தா
காண்டம்,
சுந்தர காண்டம்,
யுத்த
காண்டம் ஆகிய 6
காண்டங்கள்.
*
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -
கம்பராமாயணம்.
*
இன்றுபோய் நாளை வா -
கம்பராமாயணம்
*
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
-
கம்பராமாயணம்.
*
அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா -
கம்பராமாயணம்.
*
கம்பரின் மகன் அம்பிகாபதி ஏர்
எழுபது,
சடகோபர் அந்தாதி,
சரஸ்வதி அந்தாதி ஆகிய
நூல்களும் கம்பரால் இயற்றப்பட்ட நூல்களே.
சிற்றிலக்கியச்
செய்திகள்
*
சிற்றிலக்கிய வகை மொத்தம் 96
ஆகும்.
சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைத் தெளிவாகக் கூறும் நூல் பன்னிரு
பாட்டியில்.
*
பரணி என்பது போர்க்கள தெய்வமான
கொற்றவையைப் பாடும் நூல்.
பரணி
13
உறுப்புக்களை உடையது.
*
பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார்.
*
பெரியவர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கியம் பிள்ளைத்
தமிழ். 10
பருவங்களைக் கொண்டது பிள்ளைத் தமிழ்.
*
கலம்பகம் என்பது பல்வகைப் பாக்களையும்
கலந்து பாடப்படும் சிற்றிலக்கியமாகும்.
கலம் = 12,
பகம் = 6
ஆக மொத்தம் 18
உறுப்புக்கள்
கலம்பகத்தில் இடம் பெறும்.
*
உழவர் வாழ்வைச் சித்தரிக்கும் இலக்கியம் பள்ளு.
மருத நில
நூலாகக் கருதப்படும் இலக்கியம் பள்ளு
*
அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது
அந்தாதி ஆகும்.
அந்தாதியில் 100
பாடல்
இருக்கும்.
*
கோவை என்பது அக இலக்கியம்.
400
பாடல்களைக் கொண்ட இலக்கியம் கோவை.
கட்டளைக் கலித்துறையால் பாடப்படுவது கோவை ஆகும்.
*
சதகம் என்றால் 100
பாடல்களைக் கொண்டது என்று பொருள்.
நீதிக்கருத்துக்கள்
மிகுந்த சிற்றிலக்கியம் சதகம் ஆகும்.
பாரதியார்
*
பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம்,
சுப்பையா என்றும் அழைக்கப்பட்டார்.
பெற்றோர்
சின்னசாமி ஐயர் மற்றும் லட்சும்
அம்மாள்.
*
ஊர் எட்டயபுரம் வாழ்நாள் 11.12.1882
முதல் 11.09.1921
வரை (39
ஆண்டுகள்)
*
எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் பாரதி என்ற பட்டம்
அளித்தனர்.
*
பாரதியார் தம்மை ஷெல்லிதாசன் என்று
அழைத்துக்கொண்டார்.
*
காளிதாசன்,
சக்திதாசன்,
சாவித்திரி,
ஓர் உத்தம தேசாபிமானி,
நித்திய தீரர் ஆகியவை இவரது
புனைப்பெயர்கள்.
*
பாரதியின் புதுக்கவிதை முன்னோடி வால்ட் விட்மன்
*
புதுக்கவிதையின் முன்னோடி பாரதியார் ஆவார்.
*
கவிதையில் சுய சரிதம் எழுதிய
முதல் கவிஞர் பாரதியார்.
* 1905
ல் சக்கரவர்த்தினி என்ற இதழை பாரதியார்
தொடங்கினார்.
கர்மயோகி,
பாலபாரதி போன்ற இதழ்களையும் நடத்தினார்.
*
இந்தியா என்ற இதழின் ஆசிரியராகப்
பணியாற்றினார் பாரதியார்.
*
சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்
பாரதியார்.
*
நிவேதா தேவியைச் சந்தித்த பின் பாரதி தீவிரவாதியானார்.
*
பாரதியார் 14
மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார்.
*
இவரது முப்பெரும் பாடல்கள் கண்ணன் பாட்டு,
குயில்
பாட்டு,
பாஞ்சாலி சபதம் ஆகியன.
*
பாரதி சங்கத்தைக் கோற்றுவித்தவர் கல்கி.
*
பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தை
வழங்கியவர் வ.
ராமசாமி ஐயங்கார்.
*
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் -
பாரதியார்.
*
தேமதூரத் தமிழோசை உலகமெலாம் -
பாரதியார்.
*
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே -
பாரதியார்.
*
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் -
பாரதியார்.
*
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் -
பாரதியார்.
*
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொள்ளுத்துவோம் -
பாரதியார்.
*
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த
நாட்டிலே -
பாரதியார்.
*
ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை சாதியில் -
பாரதியார்.
*
வாழிய பாரத மணித்திருநாடு -
பாரதியார்.
*
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு
உழைத்தல் -
பாரதியார்.
*
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும்
ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் -
பாரதியார்.
*
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -
நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு -
பாரதியார்.
*
பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் -
பாரதியார்.
*
புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் -
பாரதியார்.
*
காதல் காதல் காதல் காதல்
போயின் -
பாரதியார்.
*
பாட்டினில் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் -
பாரதியார்.
*
தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில்
இச்சகத்தினை அழித்திடுவோம் -
பாரதியார்.
*
காக்கை குருவி எங்கள் சாதி
உடலும் மலையும் எங்கள் கூட்டம்
-
பாரதியார்.
*
செப்பு மொழி பதினெட்டு உடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள் -
பாரதியார்.
*
தருமட்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம்
மறுபடியும் வெல்லும் -
பாரதியார்.
*
செந்தமிழ் நாடெனும் போதினிலே -
பாரதியார்.
*
சிந்து நதியின் மிசை -
பாரதியார்.
அரசு தேர்விற்கான அறிவரங்கம்: தமிழ் இலக்கியம்-3
பாரதிதாசன்
*
இயற்பெயர் -
கனக சுப்புரத்தினம்
*
சிறப்பு பெயர் -
புரட்சிக்கவிஞர்,
பாவேந்தர்.
*
காலம்:
29.04.1891 - 21.04.1964(
அகவை
72)
*
பெற்றோர்:
கனகசபை முதலியார் -
இலக்குமி
அம்மாள்
*
திருமணம்: 1920
ல் பழநி அம்மையாரை
மணந்தார்.
*
படைப்புகள்:
எதிப்பாராத முத்தம்,
சேர தாண்டவம்,
குறிஞ்சித்
திட்டு,
கண்ணகி புரட்சிக் காப்பியம்,
மணிமேகலை வெண்பா,
காதல் நினைவுகள்,
பாண்டியன் பரிசு,
அழகின் சிரிப்பு,
இருண்ட வீடு,
குடும்ப விளக்கு,
கழைக்கூத்தியின் காதல்,
தமிழச்சியின் கத்தி,
அமைதி,
இளைஞர் இலக்கியம்,
செளமியன்,
நல்ல தீர்ப்பு,
தமிழ் இயக்கம்,
இரண்யன்
அல்லது இணையற்ற வீரன்,
காதலா
கடமையா?
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.
*
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூல்
பொதுவுடைமையை வலியுறுத்துகிறது.
*
கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல்
-
இருண்ட வீடு.
*
கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் -
குடும்ப
விளக்கு.
*
இயற்கையை வர்ணிக்கும் நூல் -
அழகின் சிரிப்பு.
*
பாரதிதாசன் நடத்திய இதழ் -
குயில்.
*
பாரதியார் மீது கொண்ட காதலால்
சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிதாசன்
என்று மாற்றிக் கொண்டார்.
*
கல்வி இல்லாத பெண்கள் களர்
நிலம் -
பாரதிதாசன்.
*
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் -
பாரதிதாசன்.
*
புதியதோர் உலகம் செய்வோம் -
பாரதிதாசன்.
*
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
-
பாரதிதாசன்.
*
கொலை வாளினை எடடா -
மிகு
கொடியோர் செயல் அறவே -
பாரதிதாசன்.
*
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத
தமிழ் என்று சங்கே முழங்கு
-
பாரதிதாசன்.
*
தமிழுக்கு அமுதென்று பேர் -
இந்ப தமிழ்
எங்கள் உயிருக்கு நேர் -
பாரதிதாசன்.
*
கோரிக்கையற்றுக்
கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த
பலா -
பாரதிதாசன்.
காரைக்கால் அம்மையார்
*
காரைக்கால் அம்மையார் இயற்பெயர் -
புனிதவதி.
பிறந்த ஊர் -
காரைக்கால்.
இவரது பாடல் மட்டுமே மூத்த
திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
*
திருவாலங்காட்டில்
தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிபட்டவர்
காரைக்கால் அம்மையார்.
*
அந்தாதி,
மாலை என்ற சிற்றிலக்கிய
வகையைத் தொடங்கி வைத்தவர்.
இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்.
*
இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில்
தம் கால் பதிக்க அஞ்சி
ஞானசம்பந்தர் ஊர்ப்புறத்தே தங்கினார்.
எண் குறிப்புகள்
*
பூதங்கள் ஐந்து,
நிலம் நீர்,
தீ,
காற்று ஆகாயம் ஆகியன.
*
ஞானந்திரியங்கள்
ஐந்து.
மெய்,
வாய்,
கண்,
மூக்கு,
செவி ஆகியன.
*
கார்மேந்திரயங்கள்
ஐந்து.
வாக்கு(
வாய்),
பாணி
(
கை),
பாதம் (
கால்),
பாயு
(
மலவாய்),
உபஸ்தம் (
கருவாய்)
ஆகியன.
*
தன் மாத்திரைகள் ஐந்து.
சுவை,
ஒளி,
ஊறு,
ஓசை,
நாற்றம் ஆகியன.
*
அந்தக் கரணங்கள் (
அக கருவிகள்)
நான்கு.
மனம்,
புத்தி (
அறிவு),
சித்தம்
(
நினைவு)
அகங்காரம் (
முனைப்பு)
ஆகியன.
*
மலங்கள் மூன்று.
ஆணவம்,
கன்மம்,
மாயை ஆகியன.
*
உடல்கள் மூன்று.
பருவுடல்,
நுண்ணுடல்,
காரண உடல் ஆகியன.
*
கர்மங்கள் மூன்று.
இருப்பு வினை
(
சஞ்சிதகர்மம்),
நுகர்வினை (
பிராத்த கர்மம்),
நிகழ்வினை
(
ஆகாமிய கர்மம்)
ஆகியன.
*
குணங்கள் மூன்று.
ராஜஸம் (
மன
எழுச்சி),
தாமஸம் (
மயக்கம்),
சாத்வீகம்
(
அமைதி)
ஆகியன.
குமரகுரூபரர்
*
பிறந்த ஊர் ஸ்ரீவைகுண்டம்.
ஐந்து
வயது வரை ஊமையாக இருந்து
திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும்
திறன் பெற்றவர் குமரகுரூபரர்.
*
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்,
மதுரைக் கலம்பகம்
ஆகிய நூல்களை மதுரையிலும்,
ஸ்ரீவைகுண்டத்தில்
கைலைக் கலம்பகத்தையும்,
சிதம்பரத்தில் சிதம்பர மும்மணிக் கோவையையும்
இயற்றியவர்.
*
காசியில் இவ்ர் நிறுவிய மடம்
குமாரசாமி மடம்.
பிரபந்த வேந்தர்
என்று அழைக்கப்படுகிறார்.
அருணகிரியார்
*
ஊர் திருவண்ணாமலை முத்தைத்தரு என்று முருகன் அடியெடுத்துக்
கொடுக்கப் பாடியவர் அருணகிரியார்.
*
சந்தக் களஞ்சியம் எனப்படும் திருப்புகழை இயற்றியவர்.
சந்த வேந்தர் என்று
அருணகிரியார் புகழப்படுகிறார்.
கனதர் அலங்காரம்,
கந்தர்
அந்தாதி,
வேல் விருத்தம்,
மயில்
விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
*
முருக நாயனார் என்று புகழப்படுபவர்.
முவரை கந்தர் அனுபூதி சொன்ன
என்தை -
என்று போற்றியவர் தாயுமானவர்
ஆவார்.
ஒட்டக்கூத்தர்
*
இயற்பெயர் கூத்தர்.
விக்கிர சோழன்,
இரண்டாம்
குலோத்துங்கன்,
இரண்டாம் இராஜராஜன் ஆகிய மூன்று சோழ
மன்னர்களின் அவைக்களப் புலவராக இருந்தவர்
ஒட்டக்கூத்தர்.
*
மூவர் உலா,
குலோத்துங்கன் பிள்லைத்
தமிழ் (
தமிழின் முதல் பிள்ளைத்
தமிழ் நூல்),
தக்கயாகப் பரணி
(
வீரபத்திர பரணி),
தில்லை உலா
போன்ற நூல்களை ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார்.
*
கூத்தனூரில் கலைமகளுக்கு கோயில் கட்டியவர் இவர்.
கவிராட்சதன்,
காளக்கவி,
சர்வஞ்ஞகவி போன்ற பட்டங்களை உடையவர்.
*
கம்பர் கூழுக்குப் பாடியவர்,
கூத்தர் மன்னனுக்குப் பாடியவர்
என்பவர்.
பாம்பன் சுவாமிகள்
*
இயற்பெயர் குமரகுருதாசர்.
இராயப்பேட்டை (
சென்னை)
பாலசுப்ரமணிய பக்த
ஜனசபையைத் தொடங்கியவர்.
*
அருணகிரியாருக்கு
குருபூஜை எடுக்கச் செய்தவர்.
இக்கால அருணகிரி என்று
போற்றப்பட்டவர்.
ஆழ்வார்கள்
*
பொய்கையாழ்வார்
பிறந்த ஊர் காஞ்சிபுரம்.
சங்கின்
அம்சமாகப் பிறந்த பொய்கையாழ்வார் முதன்
முதலாக திருமாலின் பத்து அவதாரங்களைப் பாடியவர்
ஆவார்.
*
காலம் - 7
ம்நூற்றாண்டு
*
மகாபலிபுரத்தில்
பிறந்த பூதத்தாழ்வார் பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொண்டார்.
கதாயுதத்தின் அம்சமாகப் பிறந்தவர்.
*
மயிலாப்பூரில் வாளின் அம்சமாகப் பிறந்த
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.
*
பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார்,
பேயாழ்வார் ஆகிய மூவருமே முதலாழ்வார்கள்
எனப்படுவர்.
*
சக்கரத்தின் அம்சமாக திருமழிசையில் பிறந்தவர்
திருமழிசையாழ்வார்.
*
ஸ்ரீவில்லிபுத்தூரைச்
சார்ந்த பெரியாழ்வார் கருட அம்சமாகப் பிறந்தவர்.
பட்டர் பிரான் என்றும் குறிப்பிடப்படுபவர்.
இவரது வளர்ப்பு மகள் ஆணடாள்.
ஆண்டாளுக்குக்
கோதை என்று பெயரிட்டார்.
பிள்ளைத்
தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையின்
முன்னோடி பெரியாழ்வார்.
*
பெரியாழ்வாரின்
வளர்ப்பு மகளான ஆண்டாளாழ்வார் துளசி
வனத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் ஆவார்.
சூடிக்
கொடுத்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
எனப்பட்டார்.
*
இறைவனுக்கு மனைவியானதால் நாச்சியார் எனப்பட்டார்.
திருப்பாவை,
திருமொழி ஆகியவற்றைப் பாடியவர்.
திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து
என்று சொன்னவர் இராமானுஜர் ஆவார்.
அரசு தேர்விற்கான அறிவரங்கம்: தமிழ் இலக்கியம்-4
நன்னூல்
*
இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர்.
இவர்
சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
நஅனூல் என்பது தொல்காப்பியத்தின்
வழிநூல் ஆகும்.
*
தொல்காப்பியம்
என்பது அகத்தியம் என்ற நூலின் வழிநூல்
என்பர்.
*
நன்னூல் இரண்டு அதிகாரங்களைக் (
எழுத்து,
சொல்)
கொண்டது.
முன்னூல் என்பது தொல்காப்பியம் பின்னூல்
என்பது நன்னூல்.
*
அறம்,
பொருள்,
இன்பம்,
வீடு அடைதலே
நூலின் பயனாகும்.
கிறிஸ்துவமும் தமிழும்
*
வீரமாமுனிவர்:
இத்தாலி நாட்டு பாதிரியாரான
வீரமாமுனிவரின் காலம் (1680 - 1746).
*
இயற்பெயர் -
கான்ஸ்டாண்டியஸ் ஜோசப் பெஸ்கி.
மதுரைச்
சங்கத்தார் அளித்த தைரியநாதர் என்ற
பட்டப்பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார்.
*
தொன்னூல் விளக்கம் (
குட்டித் தொல்காப்பியம்)
சதுரகாதி (
தமிழின் முதல் அகராதி)
(
தமிழகராதியின் தந்தை வீரமாமுனிவர்),
தேம்பாவணி,
பரமார்த்த குரு கதை (
தமிழின்
முதல் ஏளன நூல்)
போன்ற
நூல்களை இயற்றியவர்.
*
ஜி.
யு.
போப் (1820 - 1907):
இங்கிலாந்து நாட்டைச்
சேர்ந்த இவர் திருக்குறளை முழுமையாக
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன்,
நாலடியார்,
திருவாசகம்,
சிவஞானபோதம் ஆகியவற்றையும் மொழி பெயர்த்துள்ளார்.
*
தமிழ் மொழி பெயர்ப்புத் துறைக்கு
வழிகோலியவர்.
தம் கல்லறையில் ஒரு
தமிழ் மாணவன் என்று பொறிக்க
வேண்டு குறிப்பிட்டவர்.
*
கால்டுவெல்
(1815 - 1891):
அயர்லாந்து
நாட்டைச் சேர்ந்த இவர் திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியுள்ளார்.
தமிழ்,
தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு திராவிட மொழிகள் என்று
பெயரிட்டார்.
திருநெல்வேலிச்சரித்திரம்,
தாமரைத் தடாகம்,
ஞானஸ்தானம்
போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
*
சீகன் பால்கு (1683 - 1719):
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த
இவர் தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவினார்.
இதுவே இந்தியாவின் முதல்
அச்சுக்கூடம்.
முதன் முதலில் அச்சேறிய
மொழி தமிழ் ஆகும்.
தமிழில்
முதலில் அச்சிடப்பட்டது தமிபிரான் வணக்கம் என்ற நூல்.
பைபிளைத் தமிழில் முதன் முதலாக
மொழி பெயர்த்தவர்.
தமிழ்-
இலத்தீன் ஒப்பிலக்கண
ஆய்வு செய்யதுடன்,
தமிழ்-
இலத்தீன் அகராதி
எழுதியவர்.
*
இராபர்ட்-
டி-
நொபிலி (1577-1656):
இத்தாலி நாட்டைச்
சேர்ந்த இவர் தத்துவ போதகர்
என்று அறியப்படுகிறார்.
ரோம் பிராமணன்,
ராஜ
சன்யாசி என்று தன்னைக் கூறிக்கொண்டவர்.
மந்திரமாலை,
ஞானதீபிகை,
ஏசுநாதர் சரித்திரம் போன்றவை இவரது நூல்கள்.
*
எல்லீஸ்:
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் சென்னைக்
கல்விச் சங்கத்தை நிறுவியவர்.
முத்துசாமிப் பிள்ளை என்பவர் மூலம்
வீரமாமுனிவரின் நூல்களைத் திரட்டி வெளியிட்டவர்.
*
லேசரஸ்:
இவர் 10
ஆயிரத்துக்கு மேற்பட்ட
பழமொழிகள் கொண்ட பழமொழி அகராதியை
உருவாக்கியவர் ஆவார்.
நிகண்டுகள்
*
நிகண்டு என்பதற்கு சொற்தொகுதி,
சொற்பொருள் என்று பொருள்.
தொல்காப்பிய
உரியியல் நிகண்டு போன்றது.
*
உரியியல் வளர்ச்சி நிகண்டு எனலாம்.
தமிழின்
முதல் நிகண்டு நூல் திவாகர
நிகண்டு.
இதன் ஆசிரியர் திவாகர்.
இது ஆதி நிகண்டு எனப்படும்.
*
பிங்கல நிகண்டின் ஆசிரியர் பிங்கல முனிவர்.
*
உரிச்சொல் நிகண்டின் ஆசிரியர் காங்கேயர்
*
சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டல புருடர்.
*
அகராதி நிகண்டின் ஆசிரியர் ரேவண சித்தர்.
*
முதல் எழுத்து அகர வரிசையில்
அமைந்த தமிழின் முதல் நூல்
அகராதி நிகண்டு.
நிகண்டில் 12
தொகுதிகள் இருக்கும்.
* கவிஞர்
வைரமுத்து
எழுதிய முக்கிய நூல்கள்:
வைரமுத்துவின் முதல் கவிதை இளநெஞ்சின்
ஏக்கம்.
இவரது முதல் கவிதைத்
தொகுப்பு வைகறை மேகங்கள்.
பிற
நூல்கள் -
கவிராஜன் கதை,
தண்ணீர்தேசம்,
திருத்தி,
எழுதிய தீர்ப்புக்கள்,
இன்னொரு தேசிய கீதம்,
கொடி
மரத்தின் வேர்கள்,
என் மெளனத்தின் சப்தங்கள்,
இதுவரை நான்,
கல்வெட்டுக்கள்,
வேள்வியால்
ஒரு வேள்வி,
வானம் தொட்டுவிடும்
தூரந்தான்,
மீண்டும் என் தொட்டிலுக்கு போன்றவை
இவரின் நூல்கள்.
*
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள
இடம் -
சென்னை
*
குருதேவ் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படுபவர்
-
இரவீந்திரநாத் தாகூர்.
*
அனுமன் பிள்ளைத் தமிழ் இயற்றியவர் -
அருணாச்சலக்
கவிராயர்.
*
அண்ணா என்ற பத்திரிக்கையைத் துவங்கி
நடத்திய கட்சி -
அ.
தி.
மு.
க
*
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட
ஆண்டு - 1981
*
பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1982
*
பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1982
*
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
தொடங்கப்பட்ட ஆண்டு - 1984.
*
அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1985.
*
பாரதியாருக்கு பாரதி என்ற பட்டத்தை
அளித்தவர்கள் -
எட்டயபுரம் சமஸ்தானப்புலவர்கள்.